aditiடெல்லி அருகில் உள்ள குர்கானில் நடைபெற்ற மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த அதிதி அசோக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும். ஐரோப்பிய கோல்ஃப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த அதிதி அசோக் பதக்கம் வெல்லாதது குறிப்பிடத்தக்கது.