சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி கட்டிடங்கள் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து   கால்நடை துறை வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளி காட்சி மூலம்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார். மாநிலம் முழுவதும் சுமார்  ரூ.23.78 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக  கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.