20  நாள் மட்டும் நீடித்த நடிகையின் திருமண வாழ்க்கை..

சினிமாக்காரர்கள் திருமணம் நீடிப்பதில்லை என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனால் 20 நாட்களிலேயே நடிகையின் திருமண வாழ்க்கை கசந்துள்ள சம்பவம், விநோதமான  உண்மை.

இந்தி நடிகை பூனம் பாண்டேயும். சாம் பாம்பே என்பவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த ஒன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஷுட்டிங் ஒன்றுக்கு பூனம் பாண்டே கோவா சென்றுள்ளார். அவருடன் கணவர் சாம் பாம்பேவும் சென்றுள்ளார்.

கடந்த திங்கள் கிழமை அன்று ஓட்டலில் தங்கி இருந்த போது, தன்னை சாம் பாம்பே அடித்து உதைத்ததாக பூனம் போலீசில் புகார் செய்ததால், அவரது கணவர் சாம் பாம்பேயை போலீசார் கைது செய்தனர். அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கல்யாணமான 20 நாட்களில் என்ன தான் நடந்தது?

பூனம் பாண்டே மனம் திறக்கிறார்:

‘’அறையில் இருந்த போது என்னோடு சாம் பாம்பே சண்டை போட்டார். வார்த்தைகள் தடித்து அடிக்க ஆரம்பித்தார். முகத்தில் குத்து விட்டார். தலை முடியைப் பிடித்து இழுத்து ‘பெட்’டில் தள்ளினார். செத்துப்போவேன் என்று தான் நினைத்தேன். அறையின் தாழ்ப்பாளை உடைத்து வெளியே வந்து விட்டேன். ஓட்டல் ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர்.

விரைந்து வந்த போலீசார் சாம் பாம்பேயை பிடித்துச் சென்றனர். அதன் பிறகே நான் போலீசில் புகார் கொடுத்தேன்.

தாலி கட்டுவதற்கு முன்பு எங்களுக்கு இடையே இருந்த 3 ஆண்டு நட்பும் மோசமாகத்தான் இருந்தது. திருந்துவார் என நினைத்தேன்.மாறவில்லை.

காதலுக்குக் கண்ணில்லை என்பதற்குச் சரியான உதாரணம் நான் தான். சாம் பாம்பேயுடன் திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன். ஆனால் கொஞ்ச நாட்கள் ஆகும்.

மிருகத்தைப் போல் என்னை அடித்தவருடன் மீண்டும் வாழ்வது சரியாக இருக்காது.’’ என்கிறார்,புது மணப்பெண் பூனம் .

-பா.பாரதி.