நடிகை அனுஷ்கா பாகுபலி படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் 2 வருடம் விலகி இருந்தார். தனது தனிப் பட்ட விஷயங்களுக்காகவும் உடலை ஸ்லிம்மாக்கி மீண்டும் பழைய தோற்றத் துக்கும் தன்னை தயார்படுத்த அந்த இடைவெளியை பயன்படுத்தினார்.
2 வருட இடைவெளிக்கு பிறகு ’நிசப்தம்’ படத்தில் நடித்தார். அப்படம் கொரோனா ஊரடங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. தற்போது 1 மாதத்தில் படம் திரைக்கு வரவுள்ளது.


கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தொடங்கி மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதான் நிசப்த்தம் படத்தை ரிலீஸ் செய்யும் வேலை தொடங்கி உள்ளது. அதற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா ’தனக்கு ஏற்பட்ட காஸ்டிங் கவுச் பிரச்னை பற்றி தெரிவித்தார். ஆரம்பகால கட்டங்களில் நான் சினிமாவில் நடிக்கும்போது காஸ்டிங் கவுச் தொல்லை எனக்கு இருந்தது. திரையுலகில் பல நடிகைகள் இதுபோன்ற சூழலை அனுபவித்துள்ளனர். காச்டிங் கவுச் தொல்லையால நான் பாதிக்கப் படவில்லை. ஆரம்பம் முதலே எஆன் ஸ்டிரைட் பார்வேர்டாகவும் ததைரியமா கவும் இருந்தேன் அதனால் எந்த பாதிப்புக்கும் நான் ஆளாகவில்லை’ எனக் கூறினார் அனுஷ்கா.
காஸ்டிங் கவுச்களால் பல நடிகைகள் பாலி யல் தொல்லைகுள்ளான விவரங்களை மீடு இயக்கம் மூலம் தாங்கள் பாதிக்கப் பட்ட சம்பவங்கள் பற்றி ஏற்கனவே தெரிவித்திருக்கின்றனர். நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பகிரங்க மாக குற்றம் சாட்டினார். போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதெல்லாமே பின்னர் பிசிபிசுத்துப் போனது.