சென்னை: நடிகர் விஷால், நடிகை சாய் தனிஷிகாவை காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் தங்களது திருமண தேதியை வெட்கத்துடன் அறிவித்தனர். இது திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சங்க தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதும், நடிகர் சங்க கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெற்ற பின்பு தான் தனது திருமணம் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், அதை நிறைவேற்றும் வகையில் தற்போது தனது திருமண தேதியை அறிவித்து உள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் திறப்பு விழா ஆகஸ்ட் 15 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 29ந்தேதி அன்று தனது திருமணம் என்று அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.
முன்னதாக, தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் நடிகர் விஷால் சில மாதங்களுக்கு முன்பு கூறி வந்த நிலையில், தற்போது திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டபோது, தனது திருமண செய்தியை வெளியிட்டுள்ளார்.
விஷாலின் காதலியான நடிகை சாய் தன்ஷிகா யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார். பின்னர் பேசிய நடிகை சாய் தன்ஷிகாவும், நடிகர் விஷாலும் அடுத்தடுத்து தங்களது காதல் குறித்த தகவலை உறுதி செய்தனர். அப்போது, நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர், தங்களுக்கு வரும் ஆகஸ்டு 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.