பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துக்கொண்டார். இதுபற்றி வழக்கை மும்பை பாந்த்ரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் குடும்பத்தினர், சுஷாந்த் காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 40 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.


இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே கே சிங், பாட்னா போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் புகார் அளித்தார். அதில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரவர்த்தி தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என்று அவர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகள் கூறியிருந்தார். ஆனால் நான் அப்பாவி யான என் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் இட்டுகட்டி தரப்பட்டிருக்கிறது என்று ரியா கூறிய துடன் இந்த வழக்கை பாட்னா போலீசிலிருந்து மும்பை போலீஸுக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் பாட்னா போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து ரியாவை விசாரிக்க மும்பை வந்துள்ளனர். இதற்கிடையில் ரியா தலைமறை வாகி இருக்கிறார்.
இதுகுறித்து பீகார் போலீஸ் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே கூறும்போது,’ நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்திருக்கிறார். இதில் பிரதான குற்ற வாளியான ரியா சக்ரவர்த்தி தலைமறைவாகி இருப்பதிலிருந்து வெளியில் வந்து போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குற்றவாளி இல்லையென்றால் அவர் ஏன் ஓடி ஒளிய வேண்டும். அப்பாவியை ஒருபோதும் தண்டிக்க மாட்டோம். அவர் அதை நிரூபிக்க வேண்டும்’ என்றார்.