ஏழை எளிய மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தனது மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

2020 ம் ஆண்டு தி.மு.க. அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் ”நான் எப்போதும் என்னுடைய வாழ்கையை நினைத்து பார்க்கும் போது, மா.சுப்ரமணியன் அவர்களை நினைத்து பார்ப்பேன். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார்”

“அவர் பிழைத்ததற்கு காரணம், நிறைய மாணவர்களுக்கு கல்வி மற்றும் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தான்” என்று பேசினார்.