நாகினி 3 தொடரில் நடித்த பிரபல சின்னத்திரை நடிகர் பியர்ல் வி புரி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்துள்ளதாக பியர்ல் வி புரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

31 வயதாகும் பியர்ல் வி புரி இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பல டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று டிவி நடிகர் பியர்ல் வி புரியை கிழக்கு வசை பகுதியில் உள்ள வாலிவ் போலீஸ் அதிரடியாக போக்சோ சத்தத்தின் கீழ் கைது செய்துள்ளார்.