திரையரங்குகளில் மட்டும் தேசிய கீதத்தை எதற்கு கட்டாயமாக்க வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் எனவும், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இது குறித்த முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் ஜனவரி 9க்குள் புதிய விதிகளை உருவாக்கவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி, “தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது நான் எழுந்து நின்று பாடுகிறேன், இதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

அதே நேரம்,  திரையரங்குகளில் மட்டும் எதற்கு தேசிய கீதம் ஒலிபரப்புவதைக் கட்டாயமாக்குகிறார்கள் என்று புரியவில்லை. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்கு ஏன் கட்டாயமாக்கப்படவில்லை?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.