பாடம் சொல்லித் தருவதாகக் கூறி, பள்ளி மாணவர்களின் கைகளில் கம்புகளைத் தரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்கம் மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேற்கு வங்கம் மாநில சட்டமன்றத்தில் இன்று பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜீ தெரிவித்ததாவது:

”‘மேற்குவங்கத்தில் குறிப்பாக வடக்கு வங்காள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவதாகச்சொல்லி, ஆர்.எஸ்.எ,ஸ். அமைப்புசிலம்பம் கம்புகளைத் தருவதாக அரசுக்குரகசிய தகவல்கள் வந்திருக்கின்றன. இதுபோன்ற பயிற்சிகள் நடத்தக்கூடாது என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. ஆனாலும் ஆட்சேபமில்லா சான்றிதழை நம்மிடமிருந்து பெறாமலேயே இதுபோல் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

தவிர சிலர்அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் பள்ளிகளில் இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுவிட்டனர். ஆகவே தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்லவும் அரசு தயங்காது.

யார் வேண்டுமானாலும் பள்ளிக்கூடங்களை நடத்தலாம். இதுவரை 125 பள்ளிகளில் இவ்வாறு நடப்பது தெரியவந்துள்ளது. மேலும், 493 பள்ளிகள் கண்காணிப்பில் உள்ளன. இதுப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது’ என்றார்.