டெல்லி: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த ஆண்டு  48,000 பேர் உயிரிழந்திருப்பதாக நாடாளு மன்றத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து மத்திய  சாலை போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்,

2019ம் ஆண்டு விரைவு சாலைகள் உள்பட, தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53,872 பேர் மரணமடைந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புகளை மேம்படுத்தவும், வாகனங்கள் வடிவமைப்பு முதல் பல்வேறு கட்டங்களில் தணிக்கை செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  விரைவு சாலைகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்துள்ள சாலை விபத்துகளுக்கான பல்வேறு காரணங்களை தெரிவித்திருப்பதுடன்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போதை பொருள் உட்கொண்டது, அதிவேகம், தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டி சென்றது, சிவப்பு விளக்கை எரிய விட்டதில் ஏற்பட்ட தவறு  போன்ற பல மனித தவறுகளால்  சாலை விபத்துகள் நேரிட்டுள்ளதாகவும், இதை தடுக்க  தனியார் வல்லுனர்களின் உதவி நாடப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.