ஸ்லாமாபாத்

பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் நலமாக உள்ளதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

இன்று இந்திய விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தபட்டுள்ளது. அதை ஓட்டிச் சென்ற விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியர்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவர் நிலை என்னாகுமோ என அவருடைய உறவினர்கள் மட்டுமின்றி இந்தியர்களும் பயந்தனர். இந்நிலையில் அவர் நலமுடன் உள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது

தேநீர் அருந்தியபடி அதில் அபிநந்தன் உரையாடுகிறார்.

அந்த விவரம்வருமாறு

கே : உங்கள் பெயர் என்ன?
ப : விங் கமாண்டர் அபிநந்தன்

கே : நீங்கள் எங்கள் நாட்டில் நலமாக உள்ளீர்களா
ப : ஆம். என்னை நன்கு கவனித்துக் கொள்கிறீர்கள், இதை நான் எனது நாடு திரும்பிய பிறகும் சொல்வேன். பாகிஸ்தானியராகிய நீங்களும் உங்கள் அதிகாரிகளும் என்னை மரியாதையுடன் நடத்துகிறீர்கள். இதையே எனது நாட்டினரும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். உங்கள் இந்த நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

அப்போது அபிநந்தன் தனது கையில் உள்ள கோப்பையில் உள்ள தேநீரை அருந்துகிறார்.

கே : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்
ப : நான் தென் இந்தியாவை சேர்ந்தவன்

கே: உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?
ப : ஆம் ஆகி விட்டது.

கே : உங்களுக்கு இந்த தேநீர் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்
ப : இந்த தேநீர் அருமையாக உள்ளது. நன்றி

அதன் பிறகு கேட்கும் கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளதாக அபிநந்தன் தெரிவிக்கிறார்.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ :

[embedyt]https://www.youtube.com/watch?v=9xr4XoeZYZc[/embedyt]