இலங்கைக்கு 800 கி. மீ. தென் கிழக்கே இந்துமகா சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று பிற்பகல் 12:30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உணரப்பட்டதாகவும் இதனால் பெரும் ஆபத்து ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த திங்களன்று நேபாளில் ஏற்பட்ட 6.8 அளவு நிலநடுக்கத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு அருகே இந்துமகா சமுத்திரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.