இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை 5.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால்,  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின்படி, பாகிஸ்தானில் இன்று காலை  5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று  காலை 5.35 மணியளவில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,  இது, பாகிஸ்தானில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில்  பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலடுக்கத்தால்  உயிர்சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில்  பிற்பகல் 12.31 மணியளவில் 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியுள்ளது. இதனால் தலைநகர் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றுகாலை பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.