சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்தியஅரசிடம் விரைவில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்தியஅரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்ச்ர, நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்ததுடன், இதுதொடர்பாக விலக்கம் கேட்டு தமிழகஅரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக மாணவர்களின் நலன் கருதி,  நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு என கூறியவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழியாக தமிழக சட்டத்துறைக்கு மத்தியஅரசு அனுப்பிய குறிப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதில், நீட் தேர்வு தகுதியின் அடிப்படையிலான தேர்வு  கூறியிருப்பதுடன்,  இது தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என  கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா மத்தியஅரசின் அரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா அல்லது மாநிலஅரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா  என்பது உள்ளிட்ட விவரங்களை மத்தியஅரசின் சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகிய 2 துறைகள் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த கேள்விகளுக்கு பதில் தயாராகி உள்ளது. நீட் விலக்கு பெறுவதற்கு,  மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி முதல்வர் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு ஒன்றிய அரசுக்கு விரைவில் தமிழக அரசின் பதில் கடிதம் அனுப்பப்படும்.

இவ்வாறு கூறினார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது! பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பதில்…