நாசிக்: 
கொரோனா தொற்றுநோய்களின் போது நாசிக் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில்  வானொலி விஸ்வாஸ் வானொலி மூலம் வகுப்புகள்  நடத்தி வருகிறது.
கொரோன தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் காரணமாக, கல்வித் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  இப்போது திறன்பேசிகள் மற்றும் இணையம் மூலம் இணையத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  நாட்டின் பல பகுதிகளில்  இந்த வகையான கல்வி இன்னும் பலரால் அணுக முடியாததாகவே உள்ளது. இந்நிலையில்,  நாசிக் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில்  வானொலி விஸ்வாஸ் வானொலி மூலம் வகுப்புகள்  நடத்தி வருகிறது.  இதுகுறித்து பேசிய  ஸிலா பரிஷத் பள்ளியின் ஆசிரியர் சவிதா ஹிராமன் தாக்ரே, இங்குள்ள குழந்தைகளின் குடும்பங்களின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. ஊரடங்கு தொடங்கிய பிறகு, இந்த குழந்தைகளுக்கு எப்படி கற்பிக்க முடியும் என்று  எங்களை நாங்களே கேள்வி கேட்டுக் கொண்டோம்.
இந்நிலையில், ஸிலா பரிஷத் பள்ளியின்  தலைவர்,  அனைத்து ஆசிரியர்களுடனும் ஒரு கூட்டத்தைக் கூட்டி,  500 குழந்தைகளுக்கு FM வானொலி நிலையம் மூலம் மாணவர்களுக்கான வகுப்பு களை நடத்த  முடிவு செய்தார்.  இதையடுத்து, சமூக வானொலி ஒன்றைத் துவங்க  நாங்கள் அனைவரும் இந்த நோக்கத்திற்காக மொத்தமாக ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தோம். ஆரம்பத்தில், இந்த முயற்சி சில குழந்தைகளுக்கு அதிர்வெண் மற்றும் அணுகல் தொடர்பான சிக்கல்கள் இருந்து வந்தது.  பின்னர் வானொலி விஸ்வாஸ் மூலம்,  ஒரு ஆப் மற்றும் பென் டிரைவ்கள் மூலம் கல்வியைத் தொடர ஆரம்பித்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.    தற்போது  சமூக வானொலி வழியாக மாணவர்களுக்கான வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமூக வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் வானொலி விஸ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. கொரோனா காலத்தில் “அனைவருக்கும் கல்வி” என்ற திட்டம் “நிலையான மாதிரி விருதுகள்” பிரிவில் முதல் பரிசையும் “தீமடிக் விருதுகள்” பிரிவில் இரண்டாவது பரிசையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.