
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி யின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்
சென்னையில் மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக உள்ளது.
லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. நாளை கேரளா, கர்நாடக கடற்கரை பகுதிகளுக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.