
‘பாகுபலி 1 & 2’, ‘மகதீரா’ உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர் இயக்குநர் ராஜமௌலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத்.
இந்தியில் இவர் எழுத்தில் உருவான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘மணிகர்னிகா’ ஆகிய படங்களும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் ஆமிர்கான் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபலி பாணியின் ஒரு பிரம்மாணட திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கே.வி. விஜயேந்திர பிரசாத் உடன் ஆமிர் கான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது குறித்து கே.வி. விஜயேந்திர பிரசாத் ‘மகாபாரதம்’ தொடர்பான பேச்சுவார்த்தை எனக்கும் ஆமிர்கானுக்கும் இடையே தொடங்கியுள்ளது. விரைவில் அதற்கான கதை உருவாக்க பணிகளில் நாங்கள் ஈடுபடுவோம் என கூறியுள்ளார் .
[youtube-feed feed=1]