சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் உச்சம் அடைந்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
அதில், ராயபுரம் மண்டலத்தில் 2ஆயிரத்தை தாண்டியும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2ஆயிரத்தை எட்டும் நிலையிலும் பாதிப்புகள் உள்ளது.

தமிழகத்தில் நேற்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தண்டியுள்ளது.
ராயபுரத்தில் 2,065 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,988 பேரும், திரு.வி.க. நகரில் 1,253 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் உச்சம் அடைந்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
அதில், ராயபுரம் மண்டலத்தில் 2ஆயிரத்தை தாண்டியும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2ஆயிரத்தை எட்டும் நிலையிலும் பாதிப்புகள் உள்ளது.

தமிழகத்தில் நேற்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தண்டியுள்ளது.
ராயபுரத்தில் 2,065 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,988 பேரும், திரு.வி.க. நகரில் 1,253 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Patrikai.com official YouTube Channel