சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுதவிர இன்றைக்கு புதிதாக 2 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்று 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 104 பேரில் சென்னையில் 94 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Patrikai.com official YouTube Channel