
சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் சுந்தர்.சியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். அனைத்துமே பேச்சுவார்த்தை ரீதியில் இருக்கும் நிலையில், ஒப்பந்தப் பணிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடைந்து, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்க, சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel