
18 ரீல்ஸ் சார்பில் செளத்ரி தயாரிப்பில் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’ .இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
தற்போது, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய ‘சர்வர் சுந்தரம்’ படமும் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
இதனால் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
Patrikai.com official YouTube Channel