
தடம் வெற்றியடைந்ததை அடுத்து மாஃபியா மற்றும் பாக்ஸர் ஆகிய படங்களை முடித்துள்ள நிலையில் அருண் விஜய் இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜி என் ஆர் குமரவேலன் இயக்கும் இந்தப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு சபீர் இசையமைக்க உள்ளதாகவும், திரைக்கதை த்ரில்லிங்காக இருக்கும் என்றும் படக்குழு கூறியுள்ளது .
Patrikai.com official YouTube Channel