சென்னை:

மிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம்  என்று  தமிழக கனிமவளத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் உறுதி அளித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவுத்துறை சார்பாக மானிய கோரிக்கை விவாதங்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கிடையில், திமுக சார்பில்,  மன்னாா்குடி திமுக சட்டமன்ற உறுப்பினா் டிஆா்பி ராஜா ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்தாா்.

அப்போது பேசிய ராஜா,   தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ காா்பன் எடுக்கப்படும் பட்சத்தில் அது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பாக அமையும். கேரளாவை போன்று டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய  தமிழக சட்டத்துறை, கனிமவளத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், தமிழகத்தில்  ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், தமிழக அரசின் ஒப்புதலை பெற்ற பின்னரே திட்டத்தை நடைமுறை படுத்த முடியும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை. இதன் பின்னரும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்து ஆய்வு நடத்த திமுக தான் அனுமதி அளித்தது. அந்த திட்டத்தை ரத்து செய்ததே அதிமுக தான் என்று தொிவித்தாா். மேலும், ஹைட்ரோ காா்பன் விவகாரத்தில் சிலா் பொதுமக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைப்பதாக அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினாா்.

இதனைத் தொடா்ந்து  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது யார்? என்று,  திமுக-அதிமுக காரசார விவாதம் நடைபெற்றது.

[youtube-feed feed=1]