சென்னை:
மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் அனுமதிக்காக வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மேகதாது அணை கட்ட பிரதமர் அனுமதி வழங்கக்கூடாது என தமிழக முதவர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில், திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினும் மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறுவது வேடிக்கையானது. இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி என்றும், மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் கர்நாடக அரசின் கடிதத்தை நிராகரித்து, “மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச் சூழல் அனுமதியைக் கொடுக்க முடியாது” என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் .
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.