விருதுநகர்:

ர்ச்சை புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடிதான் எங்க டாடி என்று அசிங்கமாக பேசிய… அதிமுக தொண்டர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக அமைச்சர்கள் சுதந்திரமாக பேசி வருகிறார்கள்.. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் என்றாலே… அது சர்ச்சை தான்… என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிக்கொட்டி விடுவார்… அதனால் ஜெயலலிதா இவரைப்போன்ற அமைச்சர்களை பொம்மையாக மட்டுமே வைத்திருந்தார்போலும்…

ஏற்கனவே பலமுறை என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசி, நீதிமன்றம் வரை கொட்டு வாங்கிய அமைச்சர் தற்போது அதிமுகவினருக்கு மோடி தான் டாடி என்று கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மாவின் ஆளுமை என்பது வித்தியாசமானது. அவர் என்ன முடிவெடுக்க வேண்டுமோ அதை தில்லாக  முடிவெடுப்பார். ஜெயலலிதா எடுக்கும் முடிவுகள் அதிமுகவையும், தமிழக மக்களையும் பாதுகாக்கும் என தெரிவித்த ராஜேந்தி பாலாஜி, தற்போது அம்மா இல்லாத சூழ்நிலையில்  பிரதமர் மோடி தான் எங்க டாடி எனக் கூறினார்.

இது செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அமைச்சர்,  மோடி எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அவர் தான் டாடி என்றும், அம்மா உயிருடன் இருக்கும்போது மோடியுடன் சகோதர உணர்வுடன் பழகினார் என்றும் பேசினார்.

மோடி எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அவர் தான் டாடி என்றும் அமைச்சர் தெரிவித்தார். அம்மா உயிருடன் இருக்கும்போது மோடியுடன் சகோதர உணர்வுடன் பழகினார் என்றும் அவர் மீது அம்மா மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்றும் பேசினார்.

ஜெயலலிதாவை அம்மா என்று சொல்லும் அதிமுகவினர்,  மோடியை அப்பா (டாடி)  என்று அழைக்க வேண்டுமா? என்ன கீழ்த்தரமான சிந்தனை என்று அதிமுகவினரே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்…

காலத்தின் கோலம்… இவரையெல்லாம் அமைச்சராக பார்க்க வேண்டியது தமிழர்கள் செய்த பாவம்….