சென்னை:

ஸ்டெர்லைட் தொடர்பாக சென்னையில் நாளை (-4ம் தேதி) மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இக்கூட்டம் நடக்கவுள்ளது. சென்னை எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.