ரஜினியின் தலை சுற்றல் பேச்சு ரொம்பவே பிரபலமாகிவிட்டது.

“கொள்கை என்ன்ன்னு கேக்குறான் ஒரு சின்னப்பையன்.. ரிப்போர்ட்டர்.. அப்படியே எனக்கு தலை சுத்திருச்சு” என்று அவர் பேச… ஆளாலுக்கு அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ரகுவரன்

இதற்கு எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் நேற்று பதில் அளித்திருக்கிறார் ரஜினி.

இந்த அளவுக்கு அவரைச் சுற்றிவரும் கேள்வியைக் கேட்டவர், புதிய தலைமுறை செய்தியாளர் ரகுவரன்.

கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், ஊடகத்துறைக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. சிறந்த செய்தியாளர் என்று பெயர் எடுத்திருக்கும் இவர் ஊடகத்துறை படிப்பு படித்தவர் அல்ல. நர்சிங் படித்து, அதே துறையில் பணியாற்றியவர். ஊடகத்துறை மீதான ஆர்வத்தில் வந்தவர். ஏற்கெனவே சத்தியம் தொ.கா.வில் பணியாற்றிய இவர் தற்போது புதிய தலைமுறை தொ.கா.வில் பணிபுரிகிறார்.