சென்னை:

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக மகேஸ்வரி, சென்னை காவல் துறை பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள், பதவி உயர்வு பெற்ற லலிதாலட்சுமி திருச்சி சரக டி.ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை டிஐ.ஜி.யாக ஜெய கவுரி, ராமநாதபுரம் டிஐ.ஜி.யாக காமினி, சென்னை லஞ்ச ஒழிப்பு துறை டி.ஐ.ஜி.யாக ராதிகா, சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அன்பு, திண்டுக்கல் சரக டிஐஜி.யாக ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சரக டிஐஜி.யாக கார்த்திகேயன், சென்னை பெருநகர தலைமையக காவல் இணை ஆணையராக ஏ.ஜி. பாபு, விழுப்புரம் சரக டிஐஜி.யாக சந்தோஷ்குமார்ர் உள்பட 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.