மும்பை:
இந்திய பங்குச்சந்தைகள் முதன்முதலாக சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 134.91 புள்ளிகள் உயர்ந்து 35,932.92 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 11,009.20- என்று வர்த்தகமாகின.
தொடர்ந்து சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரம் புள்ளிகளை அடைந்து வரலாற்று சாதனை படைத்தது.
Patrikai.com official YouTube Channel