சென்னை:
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதம் எழும்பூரில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியது பற்றி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால், எவ்வித வெடிகுண்டு கிடைக்கவில்லை. அதனால் மிரட்டல் கடிதம் எழுதிய மர்ம ஆசாமியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel