சென்னை:

தினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் அதிமுக(புரட்சிதலைவி அம்மா) அணி வேட்பாளர் மதுசூதனுக்கும், அதிமுக பெயரை பயன்படுத்திய புகாரில் அதிமுக(அம்மா) அணியின் வேட்பாளர் தினகரனுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதில் நாளை மாலை 4 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் ஏற்கனவே அளித்த விளக்கம் திருப்தி இல்லாத காரணத்தால் மீண்டும் விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.