வாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்!
cca3ebd2-14bc-4d67-82e1-8e16f4c6e626
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம்.
காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை    அல்லது  12.00 – 1.00 புதன் ஓரை
அல்லது 1.00 – 2.00 சந்திர ஓரை  அல்லது  மாலை   3.00 – 4.00 குரு ஓரை
இவ் ஓரைகளில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை பூஜை செய்தால் கணபதியின் அருளால் நன்மைகள் பெருகும்!
8d05e755-43e5-44cb-99e0-9bb69bab567f
விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, 3,5,7,9-வது நாளில் தண்ணீரில் விநாயகரை கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று, வீட்டில் விநாயகரின் சிலையின் வயிற்றின் மேல் வைத்து பூஜித்த நாணயம் (காசு) மகிமை வாய்ந்தது. அதை பணப்பெட்டியில் வைக்கலாம் அல்லது பூஜை அறையில் பத்திரமாக வைத்து பூஜித்து வணங்கி வந்தால் ஸ்ரீமகாலட்சுமி அருள் எப்போதும் கிடைக்கும். வறுமை வராது
 
விநாயகர் என்பதன் பொருள்
“வி’ என்றால் “இதற்கு மேல் இல்லை’ எனப் பொருள். “நாயகர்’ என்றால் “தலைவர்’ எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட கணபதிக்கு “விநாயகர்’ என பெயர் சூட்டப்பட்டது.
விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது “ஓம் அநீஸ்வராய நம’ என்பர். “அநீஸ்வராய’ என்றால் “இவருக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை’ எனப் பொருள். ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்தினம் என்ற நூலை இயற்றினார். அதில் விநாயகரை “அநாயக ஏக நாயகம்’ எனச் சொல்கிறார்.
இதற்கு “தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாக இருப்பவர்’ எனப் பொருள். பூத கணங்களுக்கு தலைவர் என்பதால் “கணபதி’ என்றும், பாவவினைகளைத் தீர்ப்பவர் என்பதால் “விக்னேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.