
ரஜினி தற்போது நடித்துவரும் எந்தரன் 2 படத்துக்குப் பிறகு, மீண்டும் (கபாலி) இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார். ஆமாம்.. பா.ரஞ்சித் இயக்கத்தில்தான் அடுத்த படம். இந்த படத்தை தயாரிப்பவர் தனுஷ்!
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் அறிவித்துள்ளார். இதற்கு, பா.ரஞ்சித் “மகிழ்ச்சி” என்று பதில் அளித்துள்ளார்.
கபாலி படத்தின் முடிவு, மீண்டும் ஒரு படம் எடுக்க வாய்ப்பிருக்கும் நிலையிலேயே முடிந்தது. ஆகவே அப்போதே, கபாலி இரண்டாம் பாகம் வருமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போது ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணி சேர்ந்திருப்பதில் இருந்து, அந்த புதிய படம் கபாலி 2 ஆகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Patrikai.com official YouTube Channel