சென்னை: தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றுள்ள தவெக தலைவர் விஜய், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க  டெல்லி செல்கிறார்.

மே 2ந்தேதி டெல்லி செல்லும் முதல்வர் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்பட பலரை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக த.வெ.க.  குதிரை பேரத்தில் ஈடுபட்டு,  திமுக கூட்டணி கட்சிகளான  காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

மேலும் அதிமுகவின் ஒரு பிரிவினரையும் தங்களது ஆதரவார்களை வளைத்து போட்டுள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில்,  முதலமைச்சர் அரசுமுறை பயணமாக விஜய் 22ம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமர் மோடி தற்போது அரசு முறை பயணமாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். 22ம் தேதி நாடு திரும்புகிறார். இதையடுத்து அன்றைய தினமே பிரதமர் மோடியை விஜய் சந்திக்க  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் உடனானன இந்த  சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கோர இருக்கிறார்.

இதையடுத்து,  காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

[youtube-feed feed=1]