கொல்கத்தா:  அசாம், மேற்குவங்க தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக, அங்கு வரும் நாட்களில் பதவி ஏற்க உள்ளது.

அதன்படி, மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.​வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதி​காரி மே 9ந்தேதி  பதவி​யேற்க உள்​ள​தாகவும், அசாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக,  ஹிமந்த பிஸ்வா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மேற்கு வங்க தேர்​தலில் அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​துள்ள பாஜகவின் சட்​டமன்​றக் குழுக் கூட்​டம், கொல்​கத்​தா​வில்  இன்று (மே 8) நடை​பெறுகிறது. இக்​கூட்​டத்​தில், சட்டமன்​றக் கட்​சித் தலை​வ​ராக சுவேந்து அதி​காரி ஒரு​மன​தாகத் தேர்ந்​தெடுக்​கப்பட உள்​ள​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் மாநில முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இவர் முன்னாள் முதல்வர் மம்தாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்​சி​யின் மாநிலத் தலை​வர் சாமிக் பட்​டாச்​சார்​யா, சுவேந்து அதிகாரி​யின் பெயரை முன்​மொழிய, மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா அதனை முறைப்​படி அறிவிக்க உள்​ளார்.

இதனைத் தொடர்ந்​து, சுவேந்து அதி​காரி, சாமிக் பட்​டாச்​சார்யா மற்​றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செய​லா​ளர் சுனில் பன்​சல் ஆகியோர் ஆளுநர் மாளி​கைக்​குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்​ளனர். புதிய அரசு பதவி​யேற்​கும் விழா சனிக்​கிழமை (மே 9) நடை​பெறும் என்று சாமிக் பட்​டாச்​சார்யா உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்​திர​நாத் தாகூரின் பிறந்த நாளான ‘ரவீந்​திர ஜெயந்​தி’ அன்று இப்​ப​தவி​யேற்பு விழா நடைபெறு​வது குறிப்​பிடத்​தக்​கது.

மேற்கு வங்​கத்​தில் முதல் முறை​யாக அமைய​வுள்ள பா.ஜ.க. ஆட்சி​யின் தொடக்க விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​து​கொள்​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், மத்​திய அமைச்சர்​கள், கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் மற்​றும் பல்​வேறு மாநிலங்​களின் முதலமைச்​சர்​களும் இந்த பிரம்​மாண்ட விழா​வில் பங்​கேற்க உள்​ளனர்.

இதற்கிடையில்,  அசாமில் மீண்டும் ஆட்சியை  கைப்பற்றி உள்ள பாஜக, பதவி ஏற்பு விழா வரும் 12ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமில்,  மொத்​தம் உள்ள 126-ல் 102 தொகு​தி​களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்​றது. இதன்​ மூலம் தொடர்ந்து 3-வது முறை​யாக இக்​கூட்​டணி ஆட்​சியை தக்கவைத்துக் கொண்​டது.

இதனிடையே, மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்டா மற்​றும் ஹரியானா முதல்​வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்​துக்​கான மத்​தி​யப் பார்​வை​யாளர்​களாக நியமிக்கப்பட்டுள்​ளனர். ஓரிரு நாளில் பாஜக​வின் மத்​தி​யப் பார்வை​யாளர்​கள் குவாஹாட்​டிக்கு வரு​வார்​கள் என்​றும், அதன் பிறகு புதி​தாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்​.எல்​.ஏ-க்​கள் அடுத்த முதல்​வரை தேர்ந்​தெடுப்​பார்​கள் என்​றும் தகவல்​கள் தெரிவிக்கின்​றன.

எனினும், ஹிமந்த பிஸ்வா சர்​மாவே மீண்​டும் முதல்​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்பட அதிக வாய்ப்​புள்​ள​தாக மாநில பாஜக வட்டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. புதிய அரசு பதவி​யேற்பு விழா மே 12ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஆளுநர் லட்​சுமண் பிர​சாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜி​னாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்தார். புதிய முதல்​வர் மற்​றும் அமைச்​சரவை நியமிக்கப்படும் வரை தற்​காலிக​மாக பதவி​யில் தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

[youtube-feed feed=1]