சென்னை: பா.ம.க கட்சியின் மாம்பழச் சின்னம் விவகாரத்தில், ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை நாடும்படி அறிவுறுத்தி உள்ளது.

பா.ம.கவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் `நான்தான்’ என இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். அன்புமணி தனது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்குழுவை கூட்டி, பாமக தலைவராக தன்னி நிலைநிறுத்திக்கொண்டார். இதை தேர்தல் ஆணையமும் ஏற்று பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. இதனால் ராமதாஸ் பாமக நிறுவனர் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அன்புமணி தரப்பு பா.ம.க அணி எ.டி.ஏ கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளையும் பிரித்து வாங்கிக்கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார். அதே போல, ராமதாஸ் தரப்பை எந்த பெரிய கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்காத நிலையில், வேறு வழியின்றி, ராமதாஸ் பா.ம.க அணி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு, “கட்சியின் நிறுவனர் நான் என்ற ரீதியில் பா.ம.க-வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி பயன்படுத்தக் கூடாது” எனக் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதையும் மீறி அன்புமணி தரப்பு கட்சியின் அடையாளங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து, ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், “பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக என்னை அறிவிக்க வேண்டும்” என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் (மார்ச் 25 தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் மார்ச் 26ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மேலும் பாமகவின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்திருக்கிறது. சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
[youtube-feed feed=1]