சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்விதுறையில், 10 ஆண்டுfகளுக்கும் மேலாக தற்காலிகமாக இருந்த ஆசிரியர் பணிகள் நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 7499 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, முதுநிலை ஆசிரியர்கள் – 6,451 இடங்கள், பட்டதாரி ஆசிரியர்கள் – 664 இடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் – 219 இடங்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்கள் – 107 இடங்கள், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பிற பணியிடங்கள் மொத்தம் 7,499 பணியிடங்கள் நிரந் தரமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் நீண்ட காலமாக தற்காலிகமாக உள்ள பணி யிடங்களின் அவசியத்தை ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு: தற்காலிக பணியிடங்கள் அவசியமானவை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அவை நிரந்தரமாக்க முடிவு செய்யப்பட்டது.
ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமல் லாமல், சில நிர்வாக பணியிடங்களுக்கும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன:
அலுவலக உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 351 பணியிடங்களுக்கு 10 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. தொழிற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 560 பணியிடங்கள் படிப்படியாக நிறுத்தப்படும் (ஒழிவடையும் பணியிடங்கள்) இந்த பணிகளில் உள்ளவர்கள் ஓய்வு பெறும் வரை பணியில் தொடர அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மூலம் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி நிலைத்தன்மை கிடைக்கும் ஊதியம், சேவை பாதுகாப்பு உள்ளிட்ட பல நலன்கள் கிடைக்கும். எதிர்கால பதவி உயர்வுகளுக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆசிரியர் பணி நிரந்தர கோரிக்கைக்கு முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]