சென்னை: தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் TNUSRB.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, தேர்வானவர்களுக்கு வரும் பிப்.24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1299 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான முதற்கட்ட எழுத்துத் தேர்வு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 46 மையங்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய இணையதளமான ww.tnusrb.tn.gov.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு காலிப்பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 7 ஆயிரத்து 414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் ஆம் தேதி வரை உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வானவர்கள் இனி புதிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாது என தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]