சென்னை: ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்துள்ள சென்சார் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்த தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, படத்தை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும், மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று ‘உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் சென்சார் குழு இடையேயான சட்டமோதல் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று காலையில் முதல் வழக்காக ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி வழங்கும் தீர்ப்பானது அரசியல் சார்ந்த படமாக உருவாகியுள்ள விஜயின் ஜனநாயகன் உடனடியாக சான்றிதழை பெற்று திரையரங்குகளில் வெளியாகுமா? அல்லது மேல்முறையீடு மூலம் மீண்டும் தாமதத்தை எதிர்கொள்ளுமா? என்பதை இறுதி செய்ய உள்ளது.
வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமர்வு ஒற்றை கருத்தை எட்டி ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கலாம். அல்லது ஒருவர் இருவேறு மாதிரியான தீர்ப்புகளும் அறிவிக்கப்படலாம். அப்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டால், வழக்கு உடனடியாக முடிவுக்கு வராமல் மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்படும். அவர் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, இரண்டு தரப்பு கருத்துகளையும் கேட்டறிவார். அதன் பிறகு இறுதி தீர்ப்பை அறிவிப்பார். கணிப்புகளின்படி பிளவுபட்ட தீர்ப்புக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஜனநாயகன் திரைப்பட வழக்கில் ஒருமித்த முடிவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
முன்னதாக, இந்த படத்திற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் படத்தை தணிக்கை குழு U/A சான்று வழங்கப்படும் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையில் புகாரின் பேரில், இந்த படத்திற்கு சென்சார் வழங்குவதை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாக சென்சார் போர்ட் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று உயர்நீதிமன்ற அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பில், தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும்,, “ஜனநாயகன் படத்தில் வெளிநாட்டு சக்திகள் மத மோதலை இந்தியாவில் தூண்டுவதாக சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகன் படத்துக்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளன. புகார்களை ஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம். ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்யவும் ஜனநாயகன் திரைப்பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்கவும் உத்தரவிடுகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து ஆணையிடுகிறோம். புதிய கோரிக்கையுடன் தனி நீதிபதியிடம் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் மனுதாக்கல் செய்யலாம். மீண்டும் தனி நீதிபதி அமர்வில் முதலில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதால் ஜனநாயகன் படத்துக்கு சிக்கல் நீடிக்கிறது.
[youtube-feed feed=1]