சென்னை: அன்போடு வரவேற்கிறேன் என பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவியின் அமமுக இன்று இணைந்துள்ளது. இதுதொடர்பாக மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான பாஜக குழுவினருடன் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உறுதியானது.

இந்த நிலையில்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்”!

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]