ராமேஸ்வரம்:  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்பை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.  இதற்கு மத்திய மாநில அரசுகள் முறையான தீர்வு காணாத நிலையில்,  கடலுக்கு செல்லும் மீனவர்களை  எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை   அவர்களையும்,  அவர்களது படகையும்  பறிமுதல்  செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.    இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

[youtube-feed feed=1]