சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்து உள்ளார்.

கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் ஏற்கனவே ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

234 தொகுதிகளிலும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 4,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள்  கொடுத்துள்ள நிலையில், மேலும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை ஐந்தாயிரத்து நானூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற 30-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]