தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்களை தமிழக மேலிட பார்வையாளர்களாக கடந்த சில வாரங்களுக்கு முன் நியமித்தது.

இந்நிலையில், நேற்று இரவு 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாவட்ட தலைவர்களை மாற்றினால் தேர்தல் பணிகள் பாதிக்கும் என மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு அறிவுறுத்திய நிலையில் பெரும்பாலான மாவட்ட தலைவர்களை நீக்கி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் விவரம்: ஆவடி – அப்துல் அமீத், மத்திய சென்னை கிழக்கு – கராத்தே செல்வம், மத்திய சென்னை மேற்கு – எம்.எம்.டி.ஏ.கே.கோபி, வடசென்னை கிழக்கு – மாதரம்மா கனி, வடசென்னை மேற்கு – டில்லிபாபு, தென் சென்னை மத்திய – ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு – விஜய் சேகர், தென் சென்னை மேற்கு – திலகர்.

சேலம் மேற்கு – எம். ரத்தினவேல், சேலம் கிழக்கு – ஆர். கே. தேவேந்திரன், கள்ளக்குறிச்சி – எம். இதயத்துல்லா, செங்கல்பட்டு வடக்கு – செந்தில் குமார், செங்கல்பட்டு தெற்கு – பிரபு, காஞ்சிபுரம் – அருள் ராஜ், திருவள்ளூர் வடக்கு – சசிகுமார், திருவள்ளூர் தெற்கு – கங்கை குமார், உள்ளிட்ட 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]