சென்னை: ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தணிக்கை வாரியம் தரப்பில் (சென்சார் போர்டு) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அடுத்த விசாரணை பொங்கல் முடிந்து 21ந்தேதி நடைபெற உள்ளது. இதனால், படத்தை பொங்கலுக்கு படத்தை வெளியிட முடியாத சூழல் எழுந்துள்ளது. அதனால், பட தயாரிப்பு நிறுவனம், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,” ஜன நாயகன் சான்றிதழ் தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது” என தணிக்கை வாரியம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]