சென்னை: ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உத்தரவை எதிர்த்து தலைமைநீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்போவதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. விஜய்க்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகி உள்ளது.  சென்சார் போர்டின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில்,  தவெக என்ற புதிய கட்சி தொடங்கி  அரசியலில் களம் புகுந்த விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’, உலகமெங்கும் இன்று (ஜன.9) வெளியாவதாக இருந்தது. பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதால் அங்கு ஜனநாயகனுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது. மத உணர்வை புண்படுத்தும் வகையில் வசனம் இருப்பதால் சென்சார் சான்று வழங்கவில்லை என தணிக்கை வாரியம் விளக்கம் அளித்தது. இதனால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே, தணிக்கை வாரியத்துக்கு எதிராக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்த கே.வி.என் புரோடக்சன் நிறுவனம், உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டியது. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய 14காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்தி ருப்பதாகவும், மறுதணிக்கை குழு படம் பார்த்த பிறகே சென்சார் சான்று வழங்க முடியும் எனவும் தணிக்கை குழு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதனை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தனர். இதனால், ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படத்தை கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தள்ளி வைத்தது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர், நீதிபதிகள் ஆஷா இன்று இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.,

’’ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இவ்வாறு ஒரு படத்துக்கு எதிரான புகாரை ஊக்குவிக்க முடியாது’’ என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்கு அனுப்பும் முடிவை ஏற்க முடியாது என்றும் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் உடனடியாக யுஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தணிக்கைக் குழுவின் முடிவை தணிக்கை வாரியத் தலைவர் மீற முடியாது என்றும் நீதிபதி ஆஷா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இப்படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படாததை கண்டித்து திரையுலகினரும், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]