சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்றுமுதல் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் – தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜனவரி 5ந்தேதி மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது ஜனவரி 6ந்தேதி அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புஜனவரி 7ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது தற்போது, (ஜனவரி 8) தெற்கு – தென்கிழக்கு திசையில் நகர்ந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கு திசையில் 1,020 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று (ஜன. 8) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை திருவாரூா், நாகபட்டினம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய இருப்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நகர்ந்து நாளை இலங்கை கடலோர பகுதிகளில் கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]