சென்னை: தமிழ்நாட்டில், எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்து உள்ளார்7. நேற்று ஒரே நாளில் மட்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளருது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் இதுவரை 4.42 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர். அதன்படி இதுவரை 4.42 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர். நேற்று ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பிக்கப்பட்டுள்ளனர் என்றும், வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 4741 பேர் மனு அளித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.
சிறப்பு தீவிர முகாமின் முதல் நாளான டிசம்பர் 27ந்தேதி 18 வயது நிரம்பிய தகுதியுடைய 1 லட்சத்து 85 ஆயிரத்து 277 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
2-வது நாளாக நேற்றும் (டிசம்பர் 28ந்தேதி) முகாம் நடந்தது.
இந்த 2 நாட்கள் நடந்த முகாமில் 4 லட்சத்து 42 ஆயி
ரத்து 70 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 4 ஆயிரத்து 741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7ஐ அளித்தனர். தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்காக வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]