சென்னை: அதி​முக பொதுக்​குழு.,  செயற்குழு கூட்​டம்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​டணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை  சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளை அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி  தலைமையில் மூத்த அதிமுக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, பெஞ்சமின் ஆகியோரும் உடன் சென்றனர்.

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில், அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர்கள் பலர்,  அதிமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.

அ.தி.மு.க., — பா.ஜ., கூட்டணியில் வேறு கட்சிகள் இணையவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்குமாறு குரல் கொடுத்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சமீபத்தில் டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்களை கூட்டணியில் சேர்க்க, அமித் ஷா வலியுறுத்துவதாக கூறப் படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சென்னையில் நாளை(டிச.,10) நடக்கிறது. அ.தி.மு.க., அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில், பொதுச்செயலர் பழனிசாமி, துணை பொதுச்செயலர்கள் முனுசாமி, விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன், தலைமை நிலைய செயலர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும்  நான்கு  மாதங்களே இருக்கும் நிலையில், னவே கட்சியில் இருந்து பிரிந்து சென்றோரை, மீண்டும் இணைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் படும் என தெரிகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவில்லை என பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், செல்லுார் ராஜு போன்றவர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். இது போன்ற சூழலில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது.

தமிழக சட்​டப்​பேர​வை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை வானகரத்​தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அதி​முக பொதுக்​குழு மற்​றும் செயற்​குழுகூட்​டம் நாளை (டிச.10) நடை​பெறுகிறது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்​தும், திமுக அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்​னெடுப்​பது குறித்​தும் பல அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட உள்​ளன.

மேலும், பல முக்​கிய தீர்​மானங்​களும் நிறைவேற்​றப்பட இருக்​கின்​றன. அதே​போல், அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முக்​கிய முடிவு​கள் எடுக்க இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. அதேநேரம் அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முடிவு எடுக்​கப்​ப​டா​விட்​டால், வரும் 15-ம் தேதிக்​குப் பிறகு ஓபிஎஸ், தனது அரசி​யல் பயணம் குறித்து முக்​கிய முடிவை அறி​விப்​பார்​ என்றும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த பணியை தலைமை கழக மேலாளர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் பாதை கழக நிர்வாகிகள் உணவருந்தும் இடம் உணவு தயாரிப்பு கூடம் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அமருமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின்  செய்தியாளர்களிடம் கூறும்போது, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த கழகத்தின் செயற்குழு பொதுக்குழு ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இல்லாமல் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திடும் வகையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் எல்லையான கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம். சாலை எங்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகள் மாஇலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம .

இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது. இவ்வாறு பெஞ்சமின் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.