சென்னை: ‘விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..” என  காங்கிரஸ்  கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி   விளக்கம் அளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பை எட்டி உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதறகிடையில்,  காங்கிரஸ் ரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரும், ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளருமான பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியதாக தகவல்கள்  வெளியானது.

இது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள், வதந்திகள் பரவி வருகின்றன. அதே நேரத்தில், திமுக தலைமை இந்தச் சம்பவத்தை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும், கூட்டணியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது எனவும், காங்கிரஸ் தலைமைக்கு நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  விஜய் உடனான சந்திப்பால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் அளித்து உள்ளார். இதுதொடர்பாக, பிரவீன் சக்ரவர்த்தி ஆங்கில இணைதள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,  எல்லா சந்திப்புகளுக்கும் பின்னணியில் ஒரு அரசியல் திட்டம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறியதுடன்,  இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற சாதாரண சந்திப்புகள் அல்லது திரைப்படங்கள் குறித்து பேசுவதற்கான சந்திப்புகளும் இருக்கலாம் என்றார்.

மேலும்,  த.வெ.க. தலைவர் விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை, த.வெ.க-வில் இணையும் எண்ணம் எதுவும் இல்லை என்றதுடன்,  விஜயுடன் நடந்த சந்திப்பால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படவில்லை.‘ என தனது சந்திப்பு தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்,

இந்த சந்திப்பு குறித்து, காங்கிரசில் இருந்து யாராவது  “கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது” என்று கூறவில்லை என்று தெளிவுபடுத்தி பிரவீன்,  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை என்று தெரிவித்ததுடன்,  த.வெ.க-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான செய்திகள் ஊடகங்களின் பேச்சுகள் மட்டுமே என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக,  சில வாரங்களுக்கு முன் திருச்சியில் நடந்த ஒரு திருமண விழாவில், காங்கிரஸின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் விஜயின் தந்தை, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு முதலில் ரகசியமாக நடத்தப்பட்டது. ஆனால் ஊடகங்களில் செய்தி வெளிவந்ததும், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. குறிப்பாக, திமுக-காங்கிரஸ் கூட்டணியை பாதிக்கக்கூடும் வகையில் பிரவீன் சக்ரவர்த்தி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியாரா, அல்லது ராகுல் காந்தியின் அனுமதியுடன் நடந்ததா என்ற சந்தேகங்கள் எழுந்தன.

 மேலும், வரும் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட அவரே நேரடியாக விருப்பம் தெரிவித்ததாக வரும் தகவல், கட்சிக்குள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் செயல்படும் தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் இது சிக்கலாக கருதப்படுகிறது.

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…